யாழ்ப்பாணத்தில் சற்றுமுன் ரயில் விபத்து!! ஒருவர் உடல்சிதறி பலி (Photos)
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உடல்சிதறி உயிரிழந்துள்ளார்.
கந்தர்மடம் – ஆத்திசூடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மானிப்பாய், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக குறித்த நபர் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என அங்கிருப்பவர்கள் கருத்து கூறியுள்ளனர்.




