இந்தியச் செய்திகள்கிசு கிசு

மருமகனின் நண்பனுடன் உல்லாசம்.. காணாமல் போன மாமியார்.. திரும்பி வந்த போது காத்திருந்த பேரதிர்ச்சி..

தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு நடுத்தரக் குடும்பம். மாமியார் பத்மா, மகள் ஸ்ரீதேவி, மருமகன் ராஜேஷ். ராஜேஷின் நெருங்கிய நண்பன் ரமேஷ் அடிக்கடி வீட்டிற்கு வருவான். குடும்பம் அவனை ஒரு உறுப்பினராகவே பார்த்தது.

ஒரு காலை பத்மா வீட்டை விட்டு வெளியே சென்றாள். மாலை ஆனாலும் திரும்பவில்லை. மொபைல் அணைந்திருந்தது. குடும்பம் பதறியது. மாமியார் பத்மாவுக்கு வயது 43 என்றாலும் பார்பதற்கு 30 வயது இளம்பெண் போலவே தோற்றம் கொண்டவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பத்மாவின் கணவர் தவறான முடிவை எடுத்து உயிர் நீத்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்த பத்மா காணாமல் போனது பற்றி போலீசில் புகார் கொடுத்தனர். மூன்று நாட்கள் தேடல் நடந்தது. ஸ்ரீதேவி அழுது புரண்டாள். ராஜேஷ், ரமேஷுடன் சேர்ந்து ஊர் முழுக்கத் தேடினான்.

நான்காவது நாள் இரவு திடீரென பத்மா வீட்டு வாசலில் நின்றாள். முகம் சோர்வாக, கண்கள் சிவந்திருந்தன. குடும்பம் ஆனந்தக் கண்ணீர் விட்டது. ஆனால் கேள்விகள் உடனே வந்தன.

“எங்க போனீங்க? மூணு நாளா எங்க இருந்தீங்க?”

பத்மா தலையை ஆட்டினாள். “நான் எங்க போனேன்… எங்க தங்கினேன்… இதையெல்லாம் யாரும் கேட்காதீங்க. விடுங்க.” அவ்வளவுதான். பிறகு அமைதி.

அடுத்த சில நாட்களில் மாற்றம் தெரிந்தது. பத்மா அடிக்கடி வெளியே செல்லத் தொடங்கினாள். ரமேஷ் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவள் வித்தியாசமாக நடந்துகொண்டாள். ஒரு நாள் ஸ்ரீதேவி தாயின் மொபைலைப் பார்த்தாள். ரமேஷுடன் வாட்ஸ்அப் உரையாடல்.

ஸ்ரீதேவி அதிர்ச்சியடைந்தாள். தாயும் ரமேஷும் ஏதோ ரகசியம் வைத்திருப்பதாக சந்தேகம் வந்தது. அவள் ராஜேஷிடம் சொன்னாள். அத்தையா.. ச்ச ச்ச அப்படி ஒன்னும் இருக்காது.. ராஜேஷ் நம்ப மறுத்தான். ஆனால், அவனது கண்கள் அவனை மீறி கண்காணிக்கத் தொடங்கின.

ஒரு மாலை பத்மா வெளியே சென்றபோது ராஜேஷ் பின் தொடர்ந்தான். அவள் ஒரு பழைய லாட்ஜில் இறங்கினாள். உள்ளே காத்துக்கொண்டிருந்த ரமேஷ் அவளை பைக்கில் ஏற்றினான். பைக் வேகமாகச் சென்றது. ராஜேஷ் மனசு திக் திக்கென அடித்தது.

பைக் ஆள் அரவமில்லாத ஒரு காட்டுப்பகுதிக்குள் நுழைந்தது. இருவரும் இறங்கி நடக்கத் தொடங்கினர். ராஜேஷ் தூரத்தில் நின்றான். கூரை இல்லாத ஒரு கைவிடப்பட்ட வீடு. அதற்குள் இருவரும் சென்றனர்.

சில நிமிடங்கள் கழித்து ராஜேஷ் பொறுமை இழந்தான். சட்டென உள்ளே நுழைந்தான்.

ரமேஷ் உடனே எழுந்து நின்றான். பத்மா முகம் வெளுத்தது. கீழே கிடந்த புடவையை எடுத்து தன் உடலை மறைத்தாள்.

“மருமகனே… நீங்க எப்படி இங்க…?”

ரமேஷ் தொண்டை கரகரவெனச் சொன்னான். “ராஜேஷ்… அது வந்து…”

ராஜேஷ் கோபத்தில் இருவரையும் பார்த்தான். “இதெல்லாம் எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? அத்தை… இதெல்லாம் என்ன?”

பத்மாவும் ரமேஷும் பேச முடியாமல் நின்றனர். அவர்களின் பேச்சிலும் நடவடிக்கையிலும் ஏதோ மர்மம் மறைந்திருப்பது தெரிந்தது.

ராஜேஷ் நினைவுக்கு வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாமனார் திடீரென இறந்தார். அந்த இன்சூரன்ஸ் பணத்துக்காக பத்மா துடியாய் துடித்துக்கொண்டிருந்தாள். அதில் ரமேஷ் தீவிரமாக உதவி செய்தான். நல்லா இருந்த மனுஷன் எப்படி திடீரென இறந்தார்? இந்த இருவரின் தொடர்பு பற்றி மாமனாருக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ?

ராஜேஷ் அதே இடத்தில் கேட்டான். “மாமனார் இறப்புல ஏதோ சந்தேகம் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏதாவது பண்ணிருக்கீங்களா?”

ரமேஷ் முகம் மாறியது. “உனக்கு என்ன தைரியம்? என் மீது இப்படி பேசுறியே? நான் தவறு செய்தவன் தான். ஆனால் அவர் இறப்புக்கு நான் காரணமில்லை.”

அவன் ராஜேஷை நோக்கி முன்னேறினான். அப்போது பத்மா பதறிப்போய் குறுக்கிட்டாள்.

“மாப்பிள்ளை… கொஞ்சம் பொறுங்க. நான் அனைத்தையும் சொல்றேன்.”

ரமேஷ் கைகால் நடுங்கியது.

பத்மா சொன்னாள். “உன்னோட மாமனாருக்கு வேற பெண்ணோட தொடர்பு இருந்தது. அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள். அவர் அந்த வீட்டுக்குப் போய் வந்த பிறகுதான் இறந்தார். நான் அந்தப் பெண்ணிடம் நேரில் போய் விசாரிச்சேன். அவள் சொன்னா… அவர் மிகவும் விரக்தியா இருந்தாராம். நான் ரமேஷோட நெருங்கி இருப்பது அவருக்கு தெரிஞ்சு போச்சு.

அவர் என்னிடம் சொன்னார்… ‘நீயும் வேணும்னா யாரோடயாவது தொடர்பு வச்சுக்கோ. நான் கேட்க மாட்டேன்’னு. அவரை கோபப்படுத்தவே நான் ரமேஷோட பழக ஆரம்பிச்சேன். ஆனா ஒரு கட்டத்துல உண்மையாவே நெருங்கிட்டோம். இப்போ நாங்க திருமணம் பண்ணிக்கப் போறோம். அவர் இன்சூரன்ஸ் பணம்தான் என் எஞ்சிய வாழ்க்கைக்கு ஆதாரம்.”

ராஜேஷ் மனம் பொறுக்காமல் போனான். மாமனார் இறப்பில் இன்னும் சந்தேகம் இருப்பதாக உணர்ந்தான். நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்றான். ஆனால் மாமனாரின் உடல் ஏற்கனவே தகனம் செய்யப்பட்டிருந்தது. போதிய ஆதாரமோ சாட்சியோ இல்லை என்று காவல்துறை வழக்கை முடித்துவிட்டது.

இன்று பத்மாவும் ரமேஷும் சேர்ந்து வாழ்கிறார்கள். ராஜேஷ் இன்னும் அந்த சந்தேகத்தை மனசுக்குள் சுமந்துகொண்டு இருக்கிறான்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x