புதினங்களின் சங்கமம்

யாழில் 18 வயது கஜந்தினி மற்றும் 11 வயது அஜய் இருவரும் பரிதாபகரமாகப் பலியானது ஏன்? (Photos

யாழ். குடாநாட்டில் நேற்று ஒரே தினத்தில் இருவர் டெங்கு நோய் பாதிப்பு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலைய மாணவன் வ.அஜய் (வயது 11) மற்றும் கஜந்தினி யோகராசா, 2 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 18 வயது யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

டெங்கு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமயம் உயிரிழந்துள்ளனர்.

இவர்களது மரணங்களின் பின்னர் குடாநாட்டில் டெங்கு பரவல் அச்சமும் அதிகரித்துள்ளது.

யாழில் டெங்கு நோயினால் 11 வயது அஜய் பரிதாபகரமாகப் பலி!!