கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

காசுக்காக 60 வயதுக் கிழவி!! உல்லாசத்திற்கு 30 வயது பெண்!! 40 வயதான சிங்கள மன்மதராசாவின் திருவிளையாடல்!! இரு பெண்களுக்கும் நடந்த கதி!!

சொத்துக்காக 60 வயது பெண்ணையும், உல்லாசத்திற்காக 32 வயது பெண்ணையும் காதலித்து திருமணம் செய்த நபரின் லீலைகள் அம்பலமானதால், இந்த இரண்டு பெண்களும் ஓரே நாளில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் 60 வயது காதலி உயிரிழந்தார். 32 வயது காதலி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.

பிலியந்தலை பிரதேசத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த 60 வயது பெண்ணின் கணவர், 15 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அப்போது 45 வயதாக இருந்த பெண், 25 வயதுடைய இளைஞர் ஒருவருடன் காதல் வசப்பட்டிருந்தார்.

இருவரும் ஒன்றாக வசிக்க தொடங்கினார்கள். 25 வயது காதலனிற்காக தனது சொகுசு வீடு உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் அந்த இளைஞனின் பெயருக்கே எழுதியும் வைத்துள்ளார்.

கடந்த 15 வருடங்களாக இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தனது கணவன் பிலியந்தலை பிரதேசத்திலேயே வேறு ஒரு இளம் பெண்ணை இரகசிய திருமணம் செய்ததாக அந்த பெண் அறிந்தார்.

இதையடுத்து, குறிப்பிட்ட இளம்பெண்ணை கண்டறிந்து அவரிடம் நேரில் பேசி, நடந்ததை அறிந்து கொண்டார்.

இதனால் மனமுடைந்த 60 வயது காதலி தனது சொகுசு வீட்டிற்கு வந்து, பணிப்பெண்ணை வெளியில் அனுப்பிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அத்துடன், தன்னை ஏமாற்றிய 40 வயது காதலனிற்கு பல பக்க கடிதமொன்றையும் எழுதி வைத்துள்ளார்.

இதேவேளை, தன்னை ஏமாற்றிய காதலன், ஏற்கனவே 60 வயது பெண்ணுடன் வாழ்ந்து வருவதையறிந்த 32 வயதான பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

எனினும், அவர் காப்பாற்றப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார்.