புதினங்களின் சங்கமம்

விஜயகலாவுக்கு கரடியே காறித் துப்பியது!!! நடந்தது என்ன? (Video)

 

வித்தியாவைக் கொடூரமாக கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற சுவிஸ்குமாரை தப்ப வைக்க முயற்சி செய்த விஜயகலா யாழ்ப்பாணத்தில் உள்ள பல கொடூர குற்றவாளிகளையும் சுவிஸ்குமாரைப் போல் வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கொடூர குற்றங்களைச் செய்யும் புலம்பெயர் காவாலிகள் சிலரையும் மிகக் கேவலமான முறையில் காப்பாற்ற முயற்சிப்பது அம்பலமாகியுள்ளது.

நோர்வேயிலிருந்து யாழ்ப்பாணம் வந்து விஜயகலாவின் அந்தரங்க செயற்பாடுகளில் ஈடுபட்டு விஜயகலாவிடம் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வரும் யுவதிகளை ஏமாற்றி உடலுறவு கொண்ட ஊத்தை சேது என்று அழைக்கப்படும் துன்னாலையைச் சேர்ந்த நடராஜா சேதுரூபன் என்பவனை  விஜயகலா காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்திற்கே கடிதம் எழுதியுள்ள விடயம் நீதித்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது செயற்பாட்டாளர் என்று நீதி அமைச்சருக்கும் நீதிமன்ற பதிவாளர் மற்றும் சட்டமாதிணைக்களத்திற்கும் விஜயகலா 2015ம் ஆண்டு எழுதிய கடிதம் இங்கு தரப்பட்டுள்ளது. குறித்த சமயத்திலேயே வித்தியா கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்து வழக்குகள் நடைபெற்று வந்தன. அந்த நேரத்திலேயே இன்னொரு குற்றவாளியையும் விஜயகலா காப்பாற்ற முற்பட்டுள்ளார்.

இதே வேளை விஜயகலாவின் இன்னொரு அடிவருடியான விஜிமருகன் அண்மையில் 18 வயது யுவதி ஒருவரை வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றி உடலுறவு கொள்ள முற்பட்ட வேளை வலிகாமம் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டதும் காணொளியாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ்சும் நேற்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். டக்ளசே குற்றவாளிகளுக்கு இடம்கொடுத்து காப்பாற்றி வருவதாகவும் குற்றவாளிகளை டக்ளஸ் உருவாக்கி வருவதாகவும் டக்ளஸ் அமைச்சராக இருந்த போது விஜயகலா பாராளுமன்றங்களில் டக்ளசுக்கு எதிராக கதைத்துள்ள நிலையில் விஜயகலாவின் திருகுதாளங்களை டக்ளசும் வெளியிட்டுள்ளது கரடி காறித்துப்பிய நிலைக்க விஜயகலாவைக் கொண்டு சென்றுள்ளது.

No photo description available.