புதினங்களின் சங்கமம்

யாழ் மாதகல் கடலில் காணாமல் போன பகீரதன் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் – மாதகல் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

நேற்று அதிகாலை மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இளைஞர்கள் பயணித்த படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் ஒருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்ததுடன், மற்றையவர் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவரின் சடலமே இன்று காலை கரையொதுங்கியது

மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.