யாழில் சற்று முன் கோர விபத்து!! மனைவியின் கண் முன்னே கணவன் பலி!! மனைவி படுகாயம்!! வீடியோ
யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்தார், மனைவி படுகாயமடைந்துள்ளார். ஏ9, செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து நடந்தது.இளம் தம்பதி மோட்டார் சைக்கிளில் வந்தபோது, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.புவனேஸ்வரன் மனேஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார்.மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


