புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவில் 5 பேரும் படுக்கையில் வைத்து கொல்லப்படவில்லை!! கொலைகாரன் ரகு சொல்வது பொய்!! நாய் நடாத்திய போர்!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்த ரகு வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளான்.

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து முதியவர்கள் வெட்டுகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஒரு முதியவர் காயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் நின்ற அவர்களின் வளர்ப்பு நாய் கழுத்தில் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நாய் பயத்தினால் வீட்டின் ஒரு மூளையில் சுருண்டு படுத்துள்ளதுடன், அதன் கண்களில் மிரட்சியும் தெரிகிறது. நாய் தனது எஜமானர்களை காப்பாற்ற போராடிய போது நாய் மீது ரகு தாக்குதல் நடத்தி வெட்டி காயமேற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நாய் தனது எஜமானர்களை காப்பாற்ற போராடிய போது நாய் மீது ரகு தாக்குதல் நடத்தி வெட்டி காயமேற்படுத்தியுள்ளான்.

அதேவேளை கொலையான ஒருவரின் அடையாள அட்டை வீட்டின் வெளியே காணிக்குள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் , திறப்பு ஒன்றும் வெளியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொலையானவர்கள் எவரும் தூக்கித்தில் கொல்லப்படவில்லை. ஏனெனில் அவர்களின் இருவரின் சடலங்கள் வீட்டின் வெளியே காணப்படுகிறது. அதனால் அவர்கள் கொலையாளிகளிடம் இருந்து தப்பியோட முற்பட்டு கொலையாகி இருக்கலாம்.

மற்றுமொரு பெண்மணியின் சடலம் கட்டிலின் கீழே அவரது கால்கள் தொங்கிய நிலையில் காணப்படுவதனால் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு வெட்டிய போது அவர் கட்டிலின் மேல் சரிந்து விழுந்தமைக்கு ஏது நிலையே காணப்படுகிறது.

அதேபோன்று ஜன்னல் ஓரமாக மீட்கப்பட்டவரின் சடலம் உள்ள ஐன்னல் குந்து மேல், சுவர் மீது இரத்தம் தெறித்து, வழிந்தோடிய அடையாளங்கள் காணப்படுவதனால் , அவர் நிற்கும் நிலையிலையே வெட்டப்பட்டுள்ளமைக்கான ஏது நிலை காணப்படுகிறது.

எனவே எவரும் நித்திரையில் இருக்கும் போது படுகொலை செய்யப்படவில்லை என நெடுந்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நடத்தப்பட் விசாரணையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் முதியவர்கள் தூக்கத்திலிருந்த போது, கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளான் என பொலிஸ்தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது . வீட்டில் 5 முதியவர்கள் இருந்ததாகவும் அவர்களை வெட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு நாய் குரைத்து சத்தமிட, நாயையும் வெட்டியுள்ளான். நாய் காயத்துடன் தப்பித்துக் கொண்டது.

இந்த சமயத்தில், அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கும் மற்றொரு உறவினர் அங்கு வந்ததாகவும், அவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்து வெளியேறி படகில் புங்குடுதீவு சென்றதாகவும் தெரிவித்துள்ளான்.

கத்தியை நெடுந்தீவிலுள்ள கிணறொன்றில் போட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளாரன்.

நேற்று காலை புங்குடுதீவு சென்று, அங்கிருந்த மதுபான விடுதிக்கு சென்று, மதுபானம் வாங்கி அருந்தியுள்ளான்.

விசாரணையின் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல பேசி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மிகவும் திட்டமிட்டு துல்லியமான தகவல்களை பெற்று இந்தக் கொலையைச் செய்த ரகுவை போதைப்பொருள் பாவனையாளன் என கூறி அவனுக்கு புனர்வாழ்வு கொடுக்கப் போகின்றார்களா?

இவனுக்கு மனநோய் அல்லது போதைப் பொருள் பாவித்ததால் ஏற்படட மூளைப் பிசகு என கூறி சட்டத்தின் முன் சில வேளை இவன் குறைந்த தண்டனையுடன் வெளியே வரவும் வாய்ப்புள்ளது.

அவன் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவதால், இந்த விவகாரம் தொடர்பான சரியான தகவல்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே கிடைக்கப்பெறும்.

ஊர்காவற்துறை பொலிசாரிடம் கொலை செய்ததாக ஒப்புதல் தெரிவித்த ரகு, தற்போது முரணாக பேசி வருகிறான். விசாரணையாளர்களிடம், “நானா கொலை செய்தேன்“ என்றும், “நான்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ன?“, “கத்தி என்னுடையதுதான் திடீரென பார்த்தேன், கத்தியில் இரத்தம்  நான் பயந்து விட்டேன். ஓடிப்போய் கிணற்றுக்குள் போட்டு விட்டேன்“ என முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறான்.