பஸ் மிதி பலகை கழன்று வீழந்து பயணியும் நடத்துனரும் நசுங்கிப் பலி (Photos)
பேருந்தின் முன்பக்க மிதிபலகை கழன்று வீழ்ந்ததின் அதில் பயணித்த பயணி ஒருவரும் நடத்துனரும் முன் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் கடகன்னாவ பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றது. கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மிதிபலகை கடுகன்னாவையில் கழன்று வீழ்ந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறையை சேர்ந்த சேகர் என்ற நடத்துனரும் பயணி ஒருவருமே சம்பவத்தில் உயிரிழந்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.






