புதினங்களின் சங்கமம்

யாழில் டெங்கினால் 5 மாத குழந்தை உயிரிழப்பு!

யாழில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 5 மாதக் குழந்தை ஒன்று உயிரிந்துள்ளது. மீசாலை வடக்கைச் சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

கடந்த 5 நாள்களாகக் குழந்தைக்குக் காய்ச்சல் காணப்பட்ட நிலையில், பெற்றோர் ஆயுள்வேத மருந்துகளைக் கொடுத்துள்ளனர். நேற்று 06.03.2022 குழந்தைக்குக் காய்ச்சல் அதிகம் காணப்பட்டதை அடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. எனினும் சிகிச்சை பயன்றின்றி இரவு உயிரிழந்தது.

குழந்தையின் இறப்புக்கு டெங்குக் காய்ச்சலே காரணம் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.