புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி பளையில் கொடூர விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!(Video)

இன்று காலை பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று அதிகாலை வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்காது குறித்த வாகத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பொல்காவலை பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய கோசல என்பவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அதில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

May be an image of 1 person and outdoorsMay be an image of outdoors