புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பெருமளவான கஞ்சா பொதியுடன் பெண் கைது!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் பெண்ணொருவரிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் நடமாடுவதாக கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைத்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்னை பரிசோதனை செய்தனர்.

இதன்போது 2 கிலோ 100கிராம் கஞ்சா போதைப் பொருள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் பளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த பெண்ணிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணை இடம்பெற்றுவருகிறது.