சி.வி.கேயின் கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி சீமானுக்கு விளையாட்டுக் காட்டியது யார்? சிவஞானம் ஐயா கூறுவது என்ன?
தமிழரசுக் கட்சியின் கடித்தலைப்பில் சீமானுக்கு எதிராக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியாகிய கடிதம் போலியானது என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட பதவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
சீமான் தொடர்பில் நான் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி போலியானது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் தொடர்பில் நான் வெளியிட்டஅறிக்கையை திரிவுபடுத்தி போலியாக வெளியிடப்பட்டுள்ளது.



