புதினங்களின் சங்கமம்

விஜயகலா திறந்த நீதிமன்றத்தில் ஆயராகின்றார்!!

விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய வேண்டுமென அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த
கருத்து தொடர்பில், அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க தயாராக இருப்பதாக
தெரிவிக்கபட்டுள்ளது.

இதனை விஜயகலாவின் சட்டத்தரணி இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

கடந்த வருடம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த நிகழ்வொன்றில் புலிகளின் மீள் வருகை பற்றி
விஜயகலா பேசியிருந்தார்.

இந்தநிலையில் இன்றையதினம் இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக வழக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விஜயகலா விவகாரத்தில் சாட்சியங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபரின் அறிவுறுத்தலை
எதிர்பார்த்திருப்பதாகவும் பொலிசார் அறிவித்தனர்.

அத்துடன் திறந்த நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்கும் விஜயகலாவின் கோரிக்கையை நீதிமன்றம்
ஏற்றுக்கொண்ட நிலையில் , நவம்பர் 1ம் திகதிக்கு வழக்கு விசாரணைக்காக
ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.