வவுனியா மூன்றுமுறிப்புப் பகுதியில் ரயில் பாதைக்கு அருகில் இளைஞனின் சடலம்!! கொலையா?? ரயில் மோதி பலியா?? (Photos)
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் தொடருந்துக் கடவைக்கு அருகில் இன்று அதிகாலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா கல்கமுவப் பகுதியைச் சேர்ந்த இளைஞனது சடலம் அது என அடையாளம் காணப்பட்டுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்துடன் மோதி அவர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சடலத்துக்கு அருகில் சில்லறைக்காசு, தீப்பெட்டி என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.”



