புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பாசத்துடன் வளர்த்த யானை இருவரின் உயிரைப் பறித்த சோகம்

யானையை தனது குடும்ப உறுப்பினர் போல நேசித்து அன்புடன் பராமரித்து வந்த யானைப் பாகனும் அவரது உதவியாளரும் அதே யானையின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரக்வானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையில் நடைபெற்ற 78வது பொசன் பெரஹர ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட யானை திடீரென ஆவேசமடைந்து முதலில் பாகனின் உதவியாளரை தாக்கி உயிரிழக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரை காப்பாற்ற ஓடிச் சென்ற யானைப் பாகனையும் அதே யானை தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்த யானையுடன் கழித்த மனிதர்களின் உயிரையே இறுதியில் அந்த யானை பறித்துள்ளது.இந்த சம்பவம் ஒரு முக்கியமான உண்மையை மீண்டும் நினைவூட்டுகிறது…
மனிதன் எவ்வளவு அன்பு காட்டினாலும், எத்தனை ஆண்டுகள் பராமரித்தாலும் காட்டு விலங்குகளின் இயற்கையான குணம் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக வெளிப்படலாம்.
May be an image of elephant