புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன? பிரேத பரிசோதனையின் அதிர்வு! கொலை செய்யப்பட்ட சிறை அதிகாரிகளின்பிறப்புறுப்பு அகற்றப்பட்டு மல துவாரத்தினுள் தும்புத்தடி கட்டைகள் சொருகப்பட்டிருந்தன!!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது, கைதிகள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை அநாகரிகமான முறையில் தாக்கியதுடன், அவரைக் கொலை செய்வதற்கு முன்பாக அவரது பிறப்புறுப்பை அறுத்து அகற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உள்ளான போது அவரது மலக்குடலினுள் இருந்து உடைந்த தும்த்தடியின் பகுதி எடுக்கப்பட்டிருந்தது.

சிறைச்சாலை வன்முறை சம்பவம் இடம்பெற்றபோது சிறைச்சாலையிலிருந்த கைதிகளிடம் வாக்குமூலம் பெற்றபோது, இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

300 கைதிகள் அடையாளம்
இக்கொடூரச் செயலைச் செய்த கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்து வருகின்றது.

சிறைச்சாலை மோதலின் போது அதிகாரிகளைத் தாக்குவதற்காகக் கைதிகள் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள், பொல்லுகள் மற்றும் பிற உபகரணங்கள் என 1,000-க்கும் மேற்பட்ட பொருட்களை விசாரணை அதிகாரிகள் நீர்கொழும்புச் சிறைச்சாலையிலிருந்து மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கூர்மையான ஆயுதங்களில் பெரும்பாலானவை சிறைச்சாலை சமையலறையில் இருந்தவை என்றும், சில ஆயுதங்கள் கைதிகளாலேயே கையால் தயாரிக்கப்பட்டவை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடந்தபோது சிறைச்சாலையில் இருந்த அனைத்துக் கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

8 சிறைச்சாலை அதிகாரிகளை தாக்கிப் படுகொலை செய்தும், மேலும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்குக் காயங்களை ஏற்படுத்தியும் உள்ள சுமார் 300 கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளைக் கொலை செய்த கைதிகளுக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x