புதினங்களின் சங்கமம்

ஈரான் – அமேரிக்கா சண்டை குறித்து இலங்கை அரசு விழிப்பாக இருக்க வேண்டுமாம்! நாமல் கூறுகிறார்!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான அதிகரித்து வரும் உலகளாவிய பதற்ற நிலையை முன்னிட்டு, அரசு விழிப்புடன் மற்றும் தயார்நிலையுடன் இருக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச Mp வலியுறுத்தியுள்ளார்.

போரின் தாக்கத்தை அனுபவித்த நாடாக இலங்கை மோதலின் பாரிய செலவை நன்கு புரிந்துகொள்கிறது. எந்த வடிவிலான வன்முறையையும் கடுமையாக கண்டித்த அவர், இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரிய சக்திகளுக்கிடையிலான மோதல்களின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது என எச்சரித்தார்.

உலக வர்த்தகம், எரிசக்தி விநியோகம் மற்றும் வழங்கல் சங்கிலிகளில் ஏற்படும் தடைகள், இலங்கையின் வாழ்வாதாரம், சந்தைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.