புதினங்களின் சங்கமம்

யாழில் வீடு புகுந்து கொள்ளையர்கள் நடாத்திய கொடூரம்!! பெண்களுக்கு நடந்த கதி!!பெருமளவு நகைகள் கொள்ளை!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த
திருடர்கள் அங்கிருந்தவர்களை தாக்கி 24 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் சங்கானை, தொட்டிலடியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் நடந்துள்ளது.

முகத்தை மறைத்தவாறு வந்த திருடர்கள், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
வீட்டில் மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும் இருந்துள்ளனர். வாயைத் திறந்தால் தாக்குவோம் என
அவர்களை மிரட்டி, உட்கார வைத்து விட்டு, ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டு தேடுதல் நடத்தி
நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.

அப்போது திருடர்களுடன் குடும்பத் தலைவர் போராடியுள்ளார். அவரை கத்தியால் வெட்டி
காயப்படுத்தியதுடன், மற்றையவர்களை கொட்டன்களால் அடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச்
சென்றுள்ளனர்.

காயமடைந்த குடும்பத் தலைவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிசார் கொள்ளையர்களை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.