புதினங்களின் சங்கமம்

யாழ் மருத்துவ பீட மாணவியான காதலி வைத்தியருடன் கள்ளத் தொடர்பு என அறிந்து மருத்துவபீட மாணவன் தற்கொலை முயற்சி!!

யாழ் மருத்துவபீட மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். தென்பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் தனது வீட்டு மின் விசிறியில் கயிற்றை கட்டி துாக்கில் தொங்கிய வேளை மின் விசிறி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தை அடுத்து அவர் காப்பாற்றப்பட்டதாகத் தெரியவருகின்றது. தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவரது காதலியான மருத்துவபீடத்தைச் சேர்ந்த பெரும்பாண்மையின மாணவி யாழ் வைத்தியசாலையில் கடமையாற்றும் திருமணமான தமிழ் வைத்தியர் ஒருவருடன் கள்ளத்தொடர்பைப் பேணுவதை அறிந்த பின்னரே அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரது யாழ்ப்பாண நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவன் தனது காதலிக்கு அனுப்பிய வட்சப் தகவல்கள் மற்றும் குரல்பதிவுகள் போன்றவற்றை வைத்து மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிட்டு மாணவியின் கள்ளக்காதலனான வைத்தியருக்கு நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்து வருவதுடன் வைத்தியரின் மனைவியிடமும் முறையிடவுள்ளதாகவும் மாணவர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.