யாழில் இளம் குடுப்பஸ்தரை முஸ்லீம் என்ற சந்தேகத்தில் காற்சட்டை கழற்றி மர்ம உறுப்பு பார்த்த இளைஞர்கள்!!
யாழ் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் மாங்காய் வியாபாரி ஒருவனை சந்தேகத்தில் பிடித்த அப்பகுதி இளைஞர்கள் அவன் தனது ஆள் அடையாளத்தை நிரூபிக்கத் தவறியதால் அவனை முஸ்லீம் என்ற சந்தேகத்தில் மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று அவனது மர்ம உறுப்பை பரிசோதித்த பின்னர் விடுவித்துள்ளனர். இச் சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பெட்டி ஒன்றைக் கட்டிய படி மோட்டார் சைக்கிளில் மாங்காய் பிடுங்கி விற்னை செய்யும் அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த 35 வயதான குடும்பஸ்தர் ஒருவருக்கே இந்தப் பரிதாப நிலை ஏற்பட்டது. தனது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் சென்ற சமயத்திலேயே இந் நிலை ஏற்பட்டுள்ளது.