யாழ் வந்த சொகுசுப் பேருந்தில் முன் இருக்கையிலிருந்த யுவதியுடன் சில்மிசம்; முதியவர் மீது யுவதி, அன்ரி, பயணிகள் கடும் தாக்குதல்!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சொகுசு பேருந்தில், யுவதியொருவருடன் சேட்டை புரிந்ததாக குறிப்பிட்டு, யுவதியாலும், பயணிகளாலும் தாக்கப்பட்ட முதியவர் கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நேற்று (6) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அதிசொகுசு பேருந்தில் 20 வயதான யுவதியொருவரும், அவரது சிறிய தாயாரும் பயணித்துள்ளனர்.
அவர்களுக்கு பின் இருக்கையில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க ஆணொருவர், இருக்கைக்குள்ளால் கையை நுழைந்து, யுவதியுடன் அத்துமீறி நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, யுவதியாலும், சிறிய தாயாராலும் தாக்கப்பட்டார்.
இருவரும் கூச்சலிட்டபடி துள்ளியெழுந்து, பின்னாலிருந்த ஆணை தாக்கினர். இதையடுத்து, பேருந்தில் பயணித்த இளைஞர்களும், அந்த ஆணை கடுமையாக தாக்கினர்.
எனினும், அந்த ஆண் பேச முடியாமல் அதிர்ச்சியடைந்திருந்தார்.

