புதினங்களின் சங்கமம்

யாழில் முன்பள்ளி மாணவனுக்கு வாயில் சூடு வைத்த ஆசிரியர் சிறைக்குள் அடைக்கப்பட்டார்!!

யாழ்.சங்கானையில் முன்பள்ளி மாணவனுக்கு வாயில் சூடு வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்புத்துள்ளது.

கடந்த வாரம் துணைவி பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றின் மாணவன் தகாத வார்த்தை பேசினான் என கூறி நெருப்புக்குச்சியால் வாயில் சுட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் குறித்த முன்பள்ளி ஆசிரியரை கைது செய்து கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் வட்டுக்கோட்டை பொலிசார் முற்படுத்திய நிலையில், 

ஆசிரியரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.