இந்தியச் செய்திகள்

யாழ் சாட்டிக்கடலில் குடும்பஸ்தர் சுழி இழுத்துப் பலி!! அதிர்ச்சி Photos!!

மண்கும்பான் சாட்டி கடலில் (வெள்ளைக் கடற்கரை) நீராடிய குடும்பத்தலைவர் ஒருவர் நீரில் இழத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

அவருக்கு கரையில் முதலுதவி வழங்கியதையடுத்து சுவாசம் வருவதாக
கூறப்பட்டதால் அம்புலன்ஸில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பிவைக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டார் என
மருத்துவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஏ.ஜூட்சன் (வயது-41) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு கடலில் மூழ்கி மீட்கப்பட்டார்.

குருநகரைச் சேர்ந்தவர்கள் சிலர் இணைந்து சாட்டி கடற்கரைக்குச்
சென்றுள்ளனர். அவர்கள் கடலில் குளித்த வேளை குடும்பத்தலைவர் ஒருவர்
காணாமற்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுதொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து
கடற்படையினரின் படகில் குடும்பத்தலைவரை இழுத்துவந்தனர். கரையில் அவருக்கு
முதலுதவி வழங்கப்பட்டது. அவருக்கு சுவாசம் வருவதையறிந்தனர்.

அதனால் குடும்பத்தலைவர் அம்புலன்ஸில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு
அனுப்பிவைத்தனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் மருத்துவர் அறிக்கையிட்டார்.