புதினங்களின் சங்கமம்

கொழும்பில் வளர்ப்பு நாயைக் கொன்ற தமிழ் யுவதி சுபாவுக்கு நடந்த கதி இது!!

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி நுகேகொட நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்று பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது. ஒரு நாய்க்கு சட்டத்தின் மூலம் நீதி கிடைத்த சம்பவம் அது.

அது, சட்டத்தின் நீதியைப் பற்றிய அற்புதமான கதையாக இருந்தாலும், நாயின் விதி அற்புதமானதாக அமையவில்லை. காரணம், ‘ஷிட்சு’ இனத்தைச் சேர்ந்த ‘ஹனி’ என்ற ஒரு வயது செல்ல நாய்க்குட்டி, அந்த வீட்டு பணிப்பெண்ணால் பறிபோனது.

நுகேகொட மிரிஹான பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மிரிஹான பிரதான பொலிஸ் பரிசோதகர் தாக்கல் செய்த வழக்கில் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் இந்த துரதிஷ்டவசமான செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபா பெறுமதியான நாயை திருடி, ஹாலிஎல பகுதிக்கு கடத்திச் சென்று இறக்கச் செய்தமை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நுகேகொட பதில் நீதவான் சுனிதா நாணயக்கார முன்னிலையில் அழைக்கப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பெண் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

பின்னர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, அது 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிரதிவாதிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நஷ்ட ஈடு தொகையை நாய்கiள பராமரிக்கும் அமைப்பிற்கு வரவு வைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியதால், டிசம்பர் 4 ஆம் திகதிக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பணத்தை செலுத்தி ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பில் நாயின் உரிமையாளர் தெரிவிக்கையில்,

“என் ஹனிக்கு பணம் எதுவும் தேவையில்லை. சிறுவயதில் மிகவும் அன்பாக தத்தெடுக்கப்பட்ட அந்த அப்பாவி மிருகத்தை இப்படி கொன்றவரை தண்டிக்க சட்ட நடவடிக்கையில் இறங்கினேன். இந்தச் சம்பவத்தின் மூலம் என்னைப் போன்ற விலங்குகளை நேசிப்பவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், ஒரு மிருகம் இப்படிச் சிக்கலில் சிக்கினால், குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டத்தின் முன் செல்லத் தயங்காதீர்கள். விலங்குகள் தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியாது என்பது உண்மைதான். ஆனால் நம்மைப் போலவே விலங்குகளுக்கும் உரிமை உண்டு. அவர்களின் பாதுகாவலர்களாகிய நாம், இதுபோன்ற அநீதிகளுக்கு நீதி கேட்டு சட்டத்தின் முன் செல்ல தயங்கக் கூடாது“ என்றார்.

“ஹனி மிகவும் அழகான விலங்கு. ஹனிக்கு ஆறு வாரமாக இருக்கும் போது நான் கொண்டு வந்தேன். எனக்கு தெரிந்ததிலிருந்து எங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக நாய்க்குட்டிகள் உண்டு. சில சமயம் இரண்டு மூன்று நாய்க்குட்டிகள் இருந்தன. அதனால் ஹனியை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டோம். பெரும்பாலும் வீட்டு வேலை செய்பவர்களால் ஹனி குளிக்க வைக்கப்பட்டு, உணவும் அளிக்கப்பட்டது. சுபாவின் சகோதரி செல்வி எங்கள் வீட்டில் வேலை செய்தார். சுபா அக்கா வீட்டில் வேலை பார்த்தார். சுபா தினமும் காலையில் அங்கு சென்று வேலை செய்துவிட்டு மாலையில் எங்கள் வீட்டிற்கு வருவார். அவ்வகையில் இருவரும் எங்கள் வீட்டில் தங்கினர். அதனால் அவர்களை குடும்ப உறுப்பினர்களைப் போல நடத்தினோம். அந்த நம்பிக்கையின் காரணமாக, இப்படி ஒரு விஷயத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை.” என்றார்.

பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல, உனகொல்லவத்த மொரகொல்ல பகுதியைச் சேர்ந்த ஞானசேகரம் சுபாஷினி என்ற சுபா (30) மற்றும் அவரது மூத்த சகோதரி செல்வி (33) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் வரை புகார்தாரரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்தனர். புத்தாண்டு விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 10ம் திகதி ஹாலிஎலவில் உள்ள தனது வீட்டிற்கு செல்வி சென்றாலும், ஏப்ரல் 12ம் திகதியே சுபா கிராமத்திற்கு சென்றுள்ளார்.

“அன்று மாலை நான் என் சகோதரி மற்றும் மகனுடன் தனிப்பட்ட வேலைக்காக வெளியே சென்றேன். நான் வீடு திரும்பும்போது இரவு 8.30 மணி ஆகியிருந்தது. கேட் திறந்தவுடன் ஹனி ஓடி வரும். ஆனால், அன்று கேட்டைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்தும் ஹனியைக் காணவில்லை. ஹனி ஹனி என்று கூப்பிட்டபடி வீடு முழுவதும் தேடினேன். வெளியே பார்த்தேன். ஹனி வீட்டில் இல்லை என்று நினைத்தேன். வீட்டை விட்டு வெளியே வந்து வீதியில் நடந்தேன். அப்போது மகனும் காரில் வீதியில் தேடினார். ஆனால் நாங்கள் ஹனியை சந்திக்கவில்லை.”

வளர்ப்பு நாயை கண்டுபிடிப்பதற்காக அவர்கள் வீட்டில் உள்ள சிசிடிவி கமராவை சோதனை செய்தனர். அந்த காட்சிகளின்படி இரவு 7.30 மணியளவில் ஹனி வீட்டிற்குள் காணப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஹனியை காணவில்லை. இரவு 8:00 மணியளவில், சுபா என்ற பணிப்பெண் ஒரு பெரிய பையுடன் வீட்டை விட்டு வெளியேறியது கமராவில் பதிவாகியிருந்தது.

“அதனால்தான் சுபா ஹனியை எடுத்துச் சென்றிருப்பாரோ என சந்தேகப்பட்டோம். நாங்கள் வேகமாக புறக்கோட்டை பேருந்து நிலையத்திற்குச் சென்று எதாவது தகவலை அறிய முயற்சித்தோம், ஆனால் சுபா அல்லது ஹனி பற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நான் வீட்டுக்கு வந்து சுபாவை தொலைபேசியில் அழைத்து, ஹனியை கொண்டு சென்றிருந்தால் திரும்பக் கொண்டு வரும்படியும், அதனால் எந்த பிரச்சினையும் வராது என்றும் கூறினேன்.

ஹனியை கொண்டு செல்லவில்லையென சுபா மறுத்தார். பொய் வழக்கு போடாதீர்கள் என்றார்.

மறுநாள் காலை ஹனி இருக்கிறதா என்று பார்க்க சுபா வீட்டிற்கு ஒருவரை அனுப்பினேன். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே இது குறித்து போலீசில் புகார் செய்ய முடிவு செய்தேன். ஹனியின் இழப்பால் எங்கள் வீட்டில் புத்தாண்டுக்கான ஏற்பாடுகளும் இல்லாமல் போனது. இனிப்புகள் செய்வதையும் நிறுத்திவிட்டனர். ஹனிக்கு நடந்ததை நினைத்து நாங்கள் அனைவரும் வருத்தப்பட்டோம். மறுநாள் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்தேன். ஆண்டு விடுமுறை என்பதால், போலீஸ் அதிகாரிகளும் குறைவு. குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி இரண்டு குற்றச் செயல்களை விசாரித்து வந்தார். ஆனால் அவர் எங்கள் புகாருக்கு கவனம் செலுத்தி, இரண்டு பொலிசாரை புறக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு சென்று விசாரிக்க அனுப்பினார்.

12ம் திகதி காலை ஏழு மணி முதல் இரவு 12 மணி வரை பஸ் ஸ்டாண்டில் உள்ள சிசிடிவி கமராவில் சோதனை செய்தும் தகவல் கிடைக்கவில்லை. நாங்கள் அங்கே இருந்தபோது ஒரு இளைஞன் வந்து என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டார். என் நாய்க்குட்டியைக் காணவில்லை, யாரோ அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றேன்.

அன்றைய தினம் சுபா அணிந்திருந்த உடையையும், அவரின் தோற்றத்தையும், அப்படிப்பட்ட ஒரு பெண் நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு தனது பேருந்தில் சென்றதாகச் சரியாகச் சொன்னார். அப்போது அவரிடம் சாட்சி சொல்ல முடியுமா என்று கேட்டேன். அவருக்கு அது பிடித்திருந்தது. நேரில் பார்த்த சாட்சி இருந்ததால், பொலிசார் சுபாவை தொலைபேசியில் அழைத்து, 17ம் திகதி பொலிசுக்கு வரும்படி தெரிவித்தனர். அவர் மீது நான் பொய் வழக்கு போடுகிறேன் என்று அப்போது கூறியிருந்தார்.” என்றார்.

சுபா 17ஆம் திகதி காவல் நிலையத்துக்கு வந்தார். அவர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்தின் இளம் சாரதியின் சாட்சியத்தினால் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள நேர்ந்தது.

“சுபா குற்றத்தை ஒப்புக்கொண்டதால், எனக்கு ஹனி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ஹனி இறந்துவிட்டதாக சுபா கூறினார். எப்படி இறந்தது என்று கேட்டபோது, ​​எடுத்த அன்று பால் குடித்து இறந்ததாகவும், வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டதாகவும் கூறினார். அதன்பின், சுபா, செல்வி ஆகிய இருவரையும் பொலிசார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஹாலிஎலவில் உள்ள சுபாவின் வீட்டிற்கு சென்றனர். என் ஹனி வீட்டிற்குப் பின்னால் உள்ள காட்டில் ஒரு மேடான பகுதியில் புதைக்கப்பட்டிருந்தது. குழியின் மேல் சில கற்கள் போடப்பட்டிருந்தன. ஹனியை எங்கள் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெட்ஷீட்டில் சுற்றியிருந்தார். ஹானியை பார்த்ததும், அது இறந்தது முந்தைய நாள் அல்ல, அதனை எடுத்து வந்த அன்றே கொன்றிருந்தது தெளிவாகத் தெரிந்தது. அதனது சடலத்தில் எந்த சிதைவும் இல்லை. ஒரு பிராணிக்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமானால் அதை பேராதனைக்கு அனுப்ப வேண்டும் என்று அப்போதுதான் அறிந்தேன். அங்கு சென்று விலங்கின் உடலை கொடுக்க வேண்டும், அந்த சோதனையின் அறிக்கை கிடைக்க 7-10 நாட்கள் ஆகும். பிரேதப் பரிசோதனை செய்ய தனியார் நிறுவனம் 25,000 ரூபாய் வசூலித்தாலும் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தருவதில்லை. நீதிமன்றத்தில் வாய்மொழியாக வாக்குமூலம் அளிக்க முடியாததால் ஹனியின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்து தோட்டத்தில் புதைத்தோம்.” என்றார்.

ஹனியின் மரணத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சுபாவை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அடுத்த வழக்கு தவணையின் போது, அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. பேருந்து சாரதி அடையாளம் காண்பிக்கவிருந்தார். என்றாலும், அன்று சாரதிக்கு சுகவீனம் காரணமாக அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கு குறித்த திகதியில் நீதிமன்றத்திற்கு வராததால் சுபாவை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க வேண்டியதாயிற்று.

பல அமர்வுகளாக நீடித்த இந்த வழக்கு, காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சுபா என்ற ஞானசேகரம் சுபாசினி குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. ஹனியை ஏன் கொன்றேன் என சுபா எதுவும் சொல்லவில்லை.

அதைப் பற்றி சரியாகச் சொல்வது கடினம். சுபா அந்த வீட்டிலிருந்து நிரந்தரமாக வெளியேறும் நோக்கத்துடனேயே நாயை திருடிச் சென்றுள்ளார். அவர் தனது இரண்டு குழந்தைகளையும் தனது சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை செய்ய செல்ல விரும்பியிருந்தார்.

ஹனி போன்ற நாய்க்குட்டிகளின் மதிப்பைப் பற்றி அந்த வீட்டில் வேலை செய்த மற்ற பெண்ணிடம் கேட்டிருக்கிறார். ஹனியை விற்கும் நோக்கத்தில் எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

“ஹனி போன பிறகு சுமார் மூன்று மாதங்கள் நான் தூங்கவில்லை. உடல் நலம் சரி இல்லை. மனச்சோர்வுக்கு கூட மருந்து கொடுக்க வேண்டியிருந்தது. குழந்தையைப் போல் பராமரித்து வந்த அந்த அப்பாவி விலங்குக்கு நேர்ந்தது பெரும் அதிர்ச்சி. ஹனிக்கு நடந்த சம்பவம் எனக்கும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த வேதனையாக இருந்தது“ என வீட்டு உரிமையாளர் கூறினார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x