யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நோர்வையில் வசிக்கும் பிரபல நரம்பியல் வைத்திய நிபுணர் எதியோப்பியாவில் நடாத்தியது என்ன?
இலங்கை யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Norwayயை வதிவிடமாகவும் கொண்ட (யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி
பழைய மாணவி) நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதணா அவர்கள் எதியோப்பியாவில் சாதனை.
இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவியும், அங்கு கற்பித்த ஆசிரியர் மகேஸ்வரனின் புத்திரியும் ஆவார்.
எதியோபியாவில் பிறந்த 16 மாத பெண் குழந்தை இரட்டை தலையுடன் பிறந்திருந்து. பெண்குழந்தை இரட்டைத்தலை என்றபடியால் நிம்மதியாகத் தூங்குவதில் பெரும் சிரமத்தை எதிர் கொண்டு இருந்தார். வைத்திய நிபுணர் ரூபவதணா அவர்கள் Norway யிலிருந்து எதியோப்பியாவிற்கு எதுவித பலனும் எதிர்பாராது தொண்டர் அடிப்படையில் சென்று இந்த சத்திரசிகிச்சையை மேற் கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அவர்களது இந்த சேவையானது உலகத் தமிழர்கள் பெருமைப் படக்கூடிய ஒரு விடயமாகும். இவர் தமது தாயகமான இலங்கைக்கும் பல தடவை சென்று சேவை அடிப்படையில் சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.
ரூபவதனா மேன்மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.
.