மீண்டும் கொத்மலையில் பயங்கர விபத்து!! பலர் படுகாயம்! வீடியோ
கொத்மலை – இறம்பொடையில் இடம்பெற்ற வேன் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வேன், கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் திரும்பி செல்லும் வழியிலேயே குறித்த வேன், வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் குறித்த வேன் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொத்மலை – இறம்பொடையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) விபத்து ஏற்பட்டுள்ளது.
கெரண்டிஎல்லவில் பயங்கர பேருந்து விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





