Vampan memesபுதினங்களின் சங்கமம்

அப்புவும் சயிக்கிளும்… நடந்தது என்ன?

நேற்று ராமுழுக்க லைனில நிண்டு விடிய மோட்டச்சயிக்கிளுக்கு பெற்றோல் அடிச்சுப்போட்டு வந்த கோலத்தைக் கண்ட வீட்டம்மா கோடியுக்கை நிக்கிற சயிக்கிளை எடுத்து கழுவிப்பூட்டுற வேலையைப் பார்க்கச் சொல்லிக் கறாராச்சொல்லிப்போட்டா.சரி காலமைக் கஞ்சியுக்கு என்னத்துக் உலையைவைப்பான் எண்டு போட்டு சாரத்தை மடிச்சுக்கட்டிக்கொண்டு வேலையிலை வெளிக்கிட்டிட்டன்.
முந்தி உவதான் நான் பெற்றோல் தாராளமா இருக்கேக்கை எங்கினையும் சயிக்கிள்ளை திரிஞ்சா உப்பிடிச் சயிக்கிள்ளை திரிய வெக்கமில்லையே உங்கட தொழிலுக்கு ஏத்தமாதிரி இருக்க வேண்டாமோ ஆரும் எங்களைப் பற்றி என்ன நினைப்பினம் எண்டு என்ரை சயிக்கிள் ஓட்டத்தை வலோத்காரமா நிப்பாட்டினவ.
முந்தி எங்கட ஆச்சி நெடுகவும் சொல்லுறவ ஆணோ பெண்ணோ சயிக்கிள் ஓட, சமைக்க, நீந்தப்பழகவேணும் அப்பதான் ஆரையும் நம்பாமை சொந்தக்காலிலை நிக்கலாம் எண்டுவா. அதால எப்பிடியும் சயிக்கிள் ஓடிப்பழக வேணும் எண்டு நான் திட்டம் போட்டா பழகிறதுக்கு சயிக்கிள் எடுக்கிறதுதான் பெரிய பாடா இருந்தது.
பேந்து ஒருமாதிரி எங்கடவீட்ட வாற சொந்தக்காறர் ஒருத்தற்றை சயிக்கிளிலை பழகவெளிக்கிட்டன். முதல்லை சயிக்கிளை மெல்ல மெல்ல உருட்டி பேந்து இடதுகாலை பெடலிலை வைச்சு கெந்திக்கொண்டு ஓடிப்பேந்து வலது காலை பாருக்குக் கீழால குடுத்து , உதை நாங்கள் இடையுக்கால ஓடுறது எண்டிறனாங்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஹாண்டில் குறுக்க மறுக்க ஆட ஆட ஓடி ஓடி ஒரு மாதிரி பலன்ஸ் வாறதுக்கிடையில வேலி மட்டைக்காலுக்கை விழுந்து கருக்கு வெட்டின காயம் ஒழுங்கையில விழுந்தெழும்பி முழங்கால் முழங்கையில சிராய்ப்புக்காயம் எண்டு உடம்பு முழுக்க விழுப்புண் வந்திருக்கும்.
ஆச்சி உதைக்கண்டு போட்டு கருக்கு வெட்டி கவடு கிழிஞ்சாத்தான் இந்தப்பெடி ஒரு இடத்தில இருக்கும்போல. அதுக்கிடையில உங்கால ஓவசியர் வீட்டுவேலி மட்டைக்கால் எல்லாம் ஒண்டும் விடாம கழட்டிப்போடுவான் போல கிடக்கு இக்கணம் ஓவசியர் பெண்டில் அறுதலி வளப்பு அதுதான் பெடி குத்திமுறியுது எண்டு சொல்லவெல்லே போறாள் எண்டு கத்துவா.
ஆச்சி கத்தினாலும் சயிக்கிளிலை எனக்கு இருந்த காமம் அடங்கவே யில்லை.இடையுக்கால ஓடிப்பேந்து பாருக்கு மேலால காலைப்போட்டு ஓடிப் பேந்து சீற்றில நுனியில இருந்து எட்டாத காலால எட்டி எட்டி உழக்கி ஓடத்துடங்க என்னமோ எவறெஸ்றில ஏறினமாதிரி ஒரு புளுகம் வரும்.
பேந்து பள்ளிக்கம் போகேக்கை வரேக்கை சிநேகிதப்பெடியளின்ரை சயிக்கிள்ளை டபிள் ஏத்திப் பேந்து றிபிள் ஏத்தி கடைசியா கையைவிட்டு ஓடப்பழகி ஒருநாள் தெருவில புல்லுக்கடகத்தோட வந்த உருண்டையற்றை மனிசியின்ரை காலுக்கை கொண்டேச் சயிக்கிளை விட்டு விழுந்தெழும்ப உருண்டையற்றை மனிசி உழவாரப்பிடியால இடிச்சதும் பத்தாம வாயில வந்த தூசணம் எல்லாம் பேசி நரகத்தி முள்ளுகள் ஆத்தைமார் அவிச்சுப்போட விழுங்கிப் போட்டு செமியாக்குணத்தில தெருவழிய போற கிழடுகட்டையின்ரை கவட்டுக்கை சயிக்கிளைக் கொண்ணந்து விடுகுதுகள்.
நரகாலியள் ஒரு நாளும் நல்லா வராதுகள் நாசமாத்தான் போகும் உந்த நாம்பன்கள் எண்டு பேசிப்போட்டு பேந்து வந்து ஆச்சியிட்டையும் போட்டுக் குடுத்திட்டா. பேந்தென்ன வீட்டை போக ஆச்சி போயிலைக்காம்பால முதுகில வரிச்சுக்கட்டிப்போட்டா.
இன்னும் ஓடுவம்…
காரைக்கவி