புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் சாராய வெறியில் கீழே விழுந்த நபர்!! இடுப்பில் சொருகி வைத்திருந்த சாராய போத்தல் குத்தி பலி!!

கிளிநொச்சியில் மதுபான போத்தலை இடுப்பில் செருகிக் கொண்டு வந்தவர், மதுபோதையில் நிலத்தில் விழுந்து, போத்தல் உடைந்து, உடலில் காயமேற்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஏ9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்று (4) இரவு 7 மணியளவில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று (04) இரவு இரத்தப் பெருக்குடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை அவதானித்த கடைஉரிமை யாளர் ஒருவர், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கினார்.

அந்த நபரை மீட்டு ளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்லப்பட்ட சமயம் உயிரிழந்துள்ளார்.

இவரது உடலில் போத்தலினால் குத்தப்பட்டு அதிக அளவு இரத்தம் பெருக்கெடுத்து காணப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

மதுபான கடைக்கு வந்த நபர், போத்தல் ஒன்றை வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டு வெளியேறியுள்ளார். மதுபோதையில் தள்ளாடி நிலத்தில் விழுந்த போது, போத்தல் உடைந்து, உடலில் குத்தி

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்