கல்முனையில் பஸ் – வான் கோரவிபத்து!! பயணிகளுக்கு ஏற்பட்ட கதி!!(Photos)
இன்று மாலை கல்முனை – மருதமுனை பிரதான விதியில் தனியாருக்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து பேரூந்துடன் கல்முனை நதிரா சாரதி பயிற்சி பாடசாலை வேன் நேருக்கு நேராக மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது…
பேருந்தில் பயணித்தவர்கள் எவரும் எந்தவொரு சேதமும் இன்றி உயிர்தப்பினார்…
கல்முனை நதிரா சாரதி பயிற்சி பாடசாலை வேன் பயணித்தவர்கள் சிலர் பலத்த காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.






