புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு துாபி இரவோடு இரவாக இடித்தழிப்பு!!(Video)

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை பாதுகாப்பு
தரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும்
பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால்
அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப்
பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும்,
2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு
நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது….

சற்றுமுன் அப்பகுதியை நோக்கி பெருமளவு இளைஞர்கள் சென்று கொண்டிருப்பதகவும் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image may contain: tree, night and outdoorImage may contain: one or more people, people playing musical instruments and people on stageImage may contain: one or more people, people playing musical instruments and nightImage may contain: one or more people, people dancing, people standing, people walking and outdoorImage may contain: one or more people, people walking, night and outdoorImage may contain: one or more people, people dancing, people walking, crowd, night and outdoorImage may contain: one or more people, people standing and outdoor