புதினங்களின் சங்கமம்

யாழ் கச்சாயில் மணல் கொள்ளையன் துரத்தித் துரத்தி சுட்ட பொலிசார்!! 20 வயது மதுசன் படுகாயம்!! நடந்தது என்ன?

யாழ்.தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மணல் கொள்ளையன் படுகாயம் அடைந்துள்ளான்.

தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர்.

இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளான்.

படுகாயமடைந்த சாரதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 சம்பவத்தில் பாலாவி தெற்கு  கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான மாணிக்கவாசகர் மதுசன் என்பவனே படுகாயமடைந்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், மணலும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம்  பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்.