புதினங்களின் சங்கமம்

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இலங்கையின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கூடிய அரசியலமைப்பு பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நளின் பெரேரா ஓய்வு பெற்றுள்ளதையடுத்து ஜயந்த ஜயசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் சுலந்த விக்ரமரத்னவை புதிய கணக்காளர் நாயகமாக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.