புதினங்களின் சங்கமம்

கம்பஹாவில் கொரோனாவின் கொத்தணி தாக்குதல்: 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று!

கம்பஹா கொத்தணி கொரோனா தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் சற்று முன்னதாக மேலும் 139 அடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களது எண்ணிக்கை 605 ஆக அதிகரித்துள்ளதுடன் மொத்தமாக தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 708 ஆக உயர்வடைந்துள்ளது.