புதினங்களின் சங்கமம்

வவுனியாவை சேர்ந்த இளைஞனை ஏமாற்றிய கிளிநொச்சி இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி!!!

இளைஞரிடம் பண மோசடி செய்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய யுவதியொருவர் வவுனியா கந்தபுரத்தை சேர்ந்த, தற்போது கட்டார் நாட்டில் தொழில் செய்து வரும் இளைஞரிடம் வீடு கட்டுவதற்கென 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாவை கடனடிப்படையில் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த யுவதி அதைத் திருப்பிச் செலுத்தாததையடுத்து சம்மந்தப்பட்டவர்களால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கிளிநொச்சி யுவதியை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது