Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தை கைப்பற்ற வந்த இருவர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தப்பி ஓட்டம்!!!

வடக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடவென சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட ஒருவர்தான் அம்பிகா.

கல்விமான்களை உற்பத்தி செய்வதில் ஒரு காலத்தில் உலகப் பிரசித்திபெற்ற யாழ்பாணத்தில் திறமைசாலிகள் இல்லை என்று கூறி அந்த இடத்தை நிறப்ப சுமந்திரனால் இறக்குமதி செய்யப்பட் அம்பிகா, வடக்கில் கொறோனா தொற்று ஆரம்பித்த செய்தி கேட்ட உடனேயே யாழ்குடாவை விட்டு வெளியேறியுள்ளார்.

யாழில் மருத்துவ வசதிகள் இல்லை… நல்ல வைத்தியர்கள் இல்லை… இந்த முட்டாள் சனங்கள் சாதூர்யமாக நடந்துகொள்ளமாட்டார்கள். “I hate these people” என்று கூறிவிட்டு கொழும்புக்கு பறந்த அம்பிகா, தற்பொழுது கொழும்பில் இருந்து அவுஸ்ரேலியா பறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் யாழை விட்டு வெளியேறிய நேரத்தில் சுமந்திரனையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு கொழும்பு சென்றதாகக் கூறப்படுகின்றது.

‘பூவோடு சேர்ந்து நாரும் மணம் வீசும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. நாரோடு சேர்ந்து பூவும் நாறும்’ என்று புதுமொழி எழுதியுள்ளார்கள் அம்பிகாவும், சுமியும்.

சில வேளை கொழும்பு நடவடிக்கைகளுக்காக சுமந்திரன் கொழும்பில் இருப்பதாக சில அபிமானிகள் கதை கூறாலம் அப்படி இருந்ததால் என்ன நடந்தது.

இவர்கள் நான்கரை வருடத்தில் கிழித்த கிழிப்பிற்கு இப்போது கொழும்பில் பெரிய வேலை…