புதினங்களின் சங்கமம்

கட்டுநாயக்கா விமான நிலையத்தை மூடிவிட கோத்தபாய உத்தரவு!! நாளை வரை சந்தர்ப்பம்!!

ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இலங்கையில் பரவி வருவதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக யாழ். சர்வதேச விமான நிலையம் 2 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய நாடுகளில் இருந்து விமானத்தின் ஊடாக பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாளை (18) நள்ளிரவு முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இவ்வாறு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் கட்டுநாயக்க விமாக நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளும் விமானங்கள், Cargo மற்றும் Transit ஆகிய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.