புதினங்களின் சங்கமம்

யாழ் பருத்துறையில் கொடூரம்!! டிப்பர் நசுக்கி குடும்பப் பெண் பலி!!(Photos)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை குரும்பசிட்டி ஞான வைரவர் ஆலயத்திற்கு அண்மையில் துவிச்சக்கரவண்டி மீது டிப்பர் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் புலோலி காந்தீயூர் பகுதியைச் சேர்ந்த ஜீவராஜா நிர்மலாவதி ( வயது 43 ) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதியை பருத்தித்துறை பொலிஸ் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.