புலம்பெயர் தமிழர்

கிளிநொச்சி இளைஞனுக்கு அவுஸ்ரேலியாவில் நடந்த கொடூரம்!! (Photos)

நச்சு கழிவு மீள்சுழற்சி நிறுவனத்தில் ஏற்பட்ட
வெடிப்பு சம்பவத்தில் தமிழ் இளைஞர் காயம்
20 தமிழ் அகதிகள் வேலை இழப்பு

ஆஸ்திரேலியா மெல்பேர்ண் ஹம்பர்பீல்ட் பகுதியில் நச்சு கழிவுகள் மீள் சுழற்சி செய்யும் இடத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
விக்கேஷ்வரன் வரதராஜன் (வயது26) என்ற கிளிநொச்சியை சேர்ந்தவரே இதில் காயமடைந்திருந்தார். 2012 ஆண்டு படகுமூலம் ஆஸ்திரேலியா வந்த இவர் சுமார் மூன்றுவருடங்களாக இதே நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.1990ஆண்டுகளில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த இவரது குடும்பம் தமிழ் நாடு அகதி முகாமிலேயே இன்றுவரை வசித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அங்கு பணியாற்றிய ஒருவர் எதிரொலிக்கு தெரிவித்தவை வருமாறு :
கடந்த வெள்ளிக் கிழமை காலை 6 மணிக்கு விக்னேஷ் தனது கடமையை தன்னிடம் இருந்து பொறுப்பேற்றிருந்தார். அவர் பொறுபேற்றவுடன் நான் வெளியாகியிருந்தேன். அவர் தனித்தே அன்று வேலைசெய்ய வேண்டியிருந்தது. 35 நிமிடங்களில் அவரிடமிருந்து தொடர்பு எடுத்து வெடிப்பு சம்பவம் நடந்தையும் தான் வைத்தியசாலைக்கு போவதகவும் தெரிவித்தார். அவருடைய இடது பக்க முகபகுதி மற்று தொண்டை பகுதி பாதிப்படைந்துள்ளது. சுமார் மூன்று வருடங்கள் இங்கு வேலை செய்கிறோம். அனல் வீசும் காலப்பகுதியில் கூட இப்படிநடந்ததில்லை. இப்படி நடந்தமை எங்களுக்கு சந்தேகத்தை உருவாக கியுள்ளது.

 

அதேவேளை , இந் நிறுவனத்திற்கு எதிரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வழக்கு நீதி மன்றில் நிலுவையில் உள்ளது. சுமார் ஒரு லட்சத்து 53 ஆயிரம் லீற்றர் கொள்கலன்களை மட்டும் வைத்திருக்க அனுமதியளிக்பட்ட நிலையில் சுமார் 4 லட்சம் லீற்றர் கொள்கலன்களை வைத்திருந்தனர் என்ற அடிப்படையிலேயே வழக்கு இந் நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இந் நிறுவனத்தில் பாதுகாப்பு விடயம் கேள்விக்குறியாக காணப்பட்டது. வேலையாட்கள் அனேகர் கைகளில் கொப்பளங்கள் மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்்- என்று அவர் தெரிவித்திருந்தார்.

Image may contain: one or more people and people sleepingImage may contain: one or more peopleImage may contain: 1 person, close-up