முல்லைத்தீவில் பெரும் சோகம்!! செல்பி எடுக்க முற்பட்ட 15 வயது மாணவிகள் பிள்ளையார் ஆலய கேணிக்குள் வீழந்து பலி!! CCTV காட்சிகள்
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01.06.2025) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர். இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொட்டுக்கிணற்று பிள்ளையார் கேணியில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவிகளின் இறுதி நிமிடங்கள்.. இதோ CCTV Video
தவறி விழுந்து உயிரிழந்த மாணவிகள் கிருஷிகா மற்றும் றஸ்மிளா என்ற இருவரும் வீட்டின் ஒரே மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



