புதினங்களின் சங்கமம்

மன்னாரில் மீன்பிடிக்கச் சென்ற மீனவன் கடலுக்குள் வீழ்ந்து பலி!! (Photos)

மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை (25-11-2019) காலை 6:00 மணியளவில் மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இடம் பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்;
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பெப்சிகர் பீரிஸ் (23-வயது)  இளைஞன் சக மீனவருடன் இன்று திங்கட்கிழமை காலை தாழ்வுபாடு கடலில் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்படகினை குறித்த இளைஞரே ஓட்டிச் சென்றுள்ளார். இதன் போது அவ் இளைஞன் படகில் இருந்து திடீரென கடலில் வீழ்ந்துள்ளார். உடனடியாக சக மீனவர் காப்பாற்ற முயற்சி செய்ததோடு, சக மீனவர்களுக்கும் தகவல் வழங்கினார். விரைந்து வந்த சக மீனவர்கள் கடலில் தேடிய நிலையில் உயிரிழந்த நிலை குறித்து இளைஞன் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலமாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் போது மரணமடைந்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில்.
மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: 1 person