13 வயதிலேயே தாயான சிறுமி!
சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி, தனது குழந்தையை மீண்டும் பெறுவதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷில் 11 வயதாக இருந்த போது 20 வயது இளைஞருடன் அந்தச் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது
பின்னர் 13 வயதில் அவர் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை பிறந்த பின்னர், கணவரும் மாமியாரும் குழந்தையை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, சிறுமியை வீட்டைவிட்டு வெளியேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தனது குழந்தையை மீண்டும் பெறுவதற்காக அந்தச் சிறுமி சட்டத்தின் உதவியை நாடியுள்ளார். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், வழக்கை விசாரித்த நீதித்துறை அதிகாரிகள், குழந்தை தாயின் பாதுகாப்பிலேயே இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீண்ட காலப் பிரிவுக்குப் பின்னர், தாயும் குழந்தையும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.
சிறுவயதிலேயே திருமணம், தாய்மை மற்றும் குழந்தையைப் பிரிந்த துயரம் என பல்வேறு சவால்களை எதிர்கொண்ட அந்தச் சிறுமி, தனது குழந்தையை மீண்டும் பெறுவதற்காக சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

