புதினங்களின் சங்கமம்

எமக்கு இந்திரன் வேணும்!! யாழ் மத்திய கல்லுாரியில் பெண் அதிபர் நியமனத்திற்கு எதிராக பெண்களே ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 7:30 மணிக்கு கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சனைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

May be an image of 7 people and text that says '208 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எமது கல்லூரியின் கலாச்சார விழுமியங்களை பெண் அதிபரை நியமித்து அழிக்க வேண்டாம் குறைந்த மாணவர்கள் உள்ள 1500இற்கு கல்லூரிகளில் SLEAS அதிபர்கள் இற்கு மேல் மாணவர்களைக் இருக்கும் போது, 2000 எமது கல்லூரிக்கு மட்டும் கொண்ட என் அதிபரை 2???? நியமிக்கத் SLEAS தடை'