உனது மனுசனை எனக்கு விட்டுத்தா!! எவ்வளவு காசு வேணும்? யாழில் கனடா அன்ரி குடும்பப் பெண்ணுடன் பேரம் பேசியது எப்படி? ஓடியோ லீக்!
கனடா வான்கூவர் சர்ரே பகுதியை வாழ்விடமாகவும் யாழ்ப்பாணம் கொழுபுத்துறைப் பகுதியை சொந்த இடமாகவும் கொண்ட அரியரத்தினம் அனுசா என்ற கணவனை இழந்த 47 வயதான விதவைப் பெண் யாழ் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பம் ஒன்றை சீரழிக்க முற்பட்டுள்ளார். இரு சிறு பிள்ளைகளுடன் வாழும் அக் குடும்பத்தின் 36 வயதான வாகனச் சாரதியான குடும்பஸ்தரை தன்னிடம் விட்டுவிடுமாறும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாகவும் குடும்பஸ்தரின் மனைவியுடன் பேரம் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்கும் ஒரு விலை உண்டு. நீ உன்ர புருசனை விட்டுவிடு. உனக்கு வாழ் நாள் பூராக வாழ்வதற்கு பணம் தருகின்றேன் என குடும்பஸ்தரின் மனைவியுடன் அனுசா பேரம் பேசலில் ஈடுபட்ட ஓடியோவை மனைவி எமக்கு அனுப்பியுள்ளார்.
கொழும்பு – யாழிற்கு வெளிநாட்டு நபர்களுக்கு வாகனங்களை வாடகைக்கு விடும் யாழ்ப்பாண வாகன சேவை நிறுவனம் ஒன்றில் சாரதியாகக் கடமையாற்றியவரே இவ்வாறு கனடா அன்ரியின் அன்பு வலைக்குள் சிக்கியுள்ளார். கனடாவில் இருந்து யாழ் வந்த அன்ரியை பல தடவைகள் அவர் ஏற்றி இறக்கியுள்ளார். இதன் பின்னர் அனுசா குறித்த சாரதி மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்து யாழ்ப்பாணம் வரும் போது அவர்களுக்கு பரிசுப் பொருட்களும் பல தடவை வாங்கி வந்துள்ளார். அன்ரி எதற்காக தங்கள் மீது தீராத அன்பு கொண்டார் என்பதை அறியாத அப்பாவி மனைவி தற்போது பத்திரகாளியாக மாறி பச்சைத் துாசணத்தில் ஏசும் ஓடியோ இங்கு தரப்பட்டுள்ளது.
கணவனின் நடத்தை மாறல்களை அவதானித்த மனைவி ஒரு கட்டத்தில் அவனது பாஸ்போட்டை பறித்து வைத்திருப்பதாகத் தெரியவருகின்றது. அத்துடன் கணவன் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு, பாஸ்போட்டு தொலைந்துவிட்டது என கூறி மீளவும் பாஸ்போட் எடுக்க முற்பட்ட கணவன் பொலிஸ் அறிக்கை எடுக்க முடியாதவாறு தடை செய்து வைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
நான் ஒன்றும் செக்ஸ்ற்காக அலைபவள் அல்ல என்றும் ஜக்கியுடன் கதைத்துக் கொண்டே இருக்க வேணும் போல் உள்ளதாகவும் ( அந்த மன்மதனின் செல்லப் பெயராம்) தனது மகள் திருமணம் செய்த பின் தான் கனடாவில் தனியே உள்ளதால் வெறுமையை உணர்வதாகவும் கனடாவில் இருக்கும் தமிழ் ஆம்பிளைகள் பொல்லாதவர்கள், ஏமாற்றுபவர்கள், காசு கறப்பவர்கள் என்றெல்லாம் குறித்த குடும்பப் பெண்ணுடன் வெளிப்படையாகவே கதைத்து அதன் பின்னர் பச்சைத் துாசணத்தில் மனைவி பேசுவதையும் பொருட்படுத்தாது பாஸ்போட்டை் கணவரிடம் கொடுக்குமாறு கெஞ்சி வாக்குவாதப்படும் ஓடியோவை நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
கலி முற்றியதை நீங்களே அறிவீர்கள்….

