பொதுத் தேர்தல்-2020 இற்கான வாக்களிப்பு நிறைவு! வாக்களிப்பு தொடர்பான முழு விபரங்கள் இதோ!!
இலங்கையின் 9வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் பெரியளவிலான வன்முறைச் சம்பவங்கள் இன்றி அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பித்திருந்த வாக்களிப்பு நடவடிக்கையானது சற்று முன்னதாக பி.பகல் 5.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


