கதிர்காமத்திற்கு பாத யாத்திரையாகச் சென்ற பாடசாலை அதிபர் பாக்கியராஜா பலி!
கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மூன்றாவது யாத்திரிகர் நேற்று திங்கட்கிழமை காலை திடீரென உயிரிழந்தார்.
இச்சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடையிலுள்ள கஜபா வெட்டை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே.பாக்கியராஜா (வயது 52) என்பவரே இவ்விதம் உயிரிழந்த மூன்றாவது யாத்திரிகர் ஆவார்.
மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்தார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மைத்துனர் (தங்கையின் கணவர்) ஆவார்.
இவரது சடலம் தற்சமயம் பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது .
இவரை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.புனிதராஜன் பார்வையிட்டார்.
இதேவேளை பாதயாத்திரையின் போது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது யாத்திரிகர் காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் யாத்திரிகர் மரணம் கடந்த 8 ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் வைத்து இடம்பெற்று இருக்கின்றது. அவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

