புதினங்களின் சங்கமம்

ஊழல் மோசடி! வவுனியா பிரதேசசெயலாளர் சுலோஜினி பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார்!

வவுனியா மாவட்டத்தின் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த சுலோஜினி குகன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் பணித்தடை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு நடவடிக்கை தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இலஞ்சச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இதனையடுத்து, பொதுச்சேவைகள் ஆணைக்குழுவானது அவரை பணியில் இருந்து இடைநிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x