மீகொடை தன்சல் நிலையத்தில் கெப் வண்டியை செலுத்தி ஆறு பேர் கொல்லப்படுவதற்கு காரணமான சாரதி இவன்தான்!
பெயர் பிரதீப் குமார என்ற இந்த நபர் lபிலியந்தலையை சேர்ந்தவர். இன்று போலீசாரால் கைது செய்யப்பட்ட இவரை ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமரில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மது போதையில் வாகனம் செலுத்துதல் உட்பட 10 குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
விபத்து இடம் பெறும் போது கெப் வண்டியில் மேலும் இருவர் இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

