புதினங்களின் சங்கமம்

நாளை வடமாகாணம் தழுவிய சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது.

இன்று நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியின் அருகில் நீதிமன்ற உத்தரவையும்
புறந்தள்ளி, உயிரிழந்த பிக்குவின் உடலை தகனம் செய்தனர். இதன்போது, நீதிமன்ற உத்தரவை
சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சுகாஷ் தாக்கப்பட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வடக்கிலுள்ள சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில்
ஈடுபடவுள்ளதுடன், முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தும் ஒழுங்கமைப்பில்
ஈடுபட்டு வருவதாக அறிய முடிந்தது.