இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

நீதிபதியின் குடும்பமே சேர்ந்து மருமகளிற்கு செய்த கொடுமை..!! (Video)

தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ராமமோகன ராவ் தன் மருமகளைத் தாக்கிய காணொளியால் அவரது குடும்பம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஹைதராபாத்தில் ஒரு பெண்ணை ஒட்டு மொத்தக் குடும்பமும் சேர்ந்து தாக்கும் காட்சிகள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெண்ணை, அடிப்பது சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராமமோகன ராவும் அவரது குடும்பமும் என தெரியவந்துள்ளமை நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குறித்த காணொளி கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் திகதி இரவு 11 மணிக்கு மேல் ராமமோகன ராவின் மகன் வசிஸ்டாவுக்கும் அவரின் மனைவிக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் வசிஸ்டா அவரின் மனைவி சிந்து சர்மாவை சோபாவில் தள்ள அவரைத்தொடர்ந்து நிதிபதி ராமமோகன ராவும் தன் மருமகளை அடித்துத் துன்புறுத்துவதோடு கடுமையாக மருமகளிடம் நடந்துகொள்கின்றார்.

சிந்து சர்மாவின் குழந்தை தன் தாயின் கால்களைக் கட்டியணைத்தபடி அழுகிறது. அதைப் பொருட்படுத்தாத நீதிபதி தன் மருமகளைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டே இருக்கிறார்.

குறித்த முன்னாள் நீதிபதி ராமமோகன ராவின் மகன் வசிஸ்டாவுக்கும் சிந்து சர்மாவுக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களிற்கு இரண்டு குழந்தைகள் . இந்நிலையில் , வசிஸ்டா தன்னை துன்புறுத்தி வருவதாக சிந்து ஏற்கெனவே புகார் தெரிவித்திருந்த நிலையில் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.

வீடியோவுக்குப் பிறகு நடந்த சம்பவங்களை விவரித்த சிந்து, “அன்றைய தினம் என் கணவர், அவரின் அப்பா, அம்மா என அனைவரும் வரதட்சணை கேட்டு என்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அவர்களுடன் வீட்டில் வேலை செய்பவரும் இணைந்துகொண்டு தன்னை உடல்ரீதியாகவும் கடுமையாகத் தாக்கியதால் வலி தாங்க முடியாமல் தான் கீழே விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அதனையடுத்து அவர்கள் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, தன்னால் நிற்க முடியவில்லை என்பதால் ஸ்ட்ரெக்சரில் வைத்து அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளே சென்றதும் தனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என கூறிய நீதிபதியின் மனைவி, உடனடியாக மயக்க மருந்து கொடுக்க வேண்டும் கூறியதாகவும், ஆனால் அவரின் வார்த்தைகளைக் கேட்காத மருத்துவர்கள் தனக்கு முறையான சிகிச்சை அளித்ததாகவும் கூறியுள்ளார்.

அதன்பின்னர் மருத்துவமனையிலிருந்து தான் தாய் வீட்டுக்குச் சென்று, மறுநாள் கணவர் வீட்டினர் மீது பொலிஸ்நிலையத்தில் புகார் அளித்ததோடு, தன் இரு பிள்ளைகளையும் எ ஒப்படைக்கும்படி அவர்களின் வீட்டுக்கு முன் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், ஒரு குழந்தையை மட்டுமே அவர்கள் தன்னிடம் ஒப்படைத்ததாக கூறிய சிந்து, மற்ற குழந்தையினையும் மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சிந்து கொடுத்த புகாரின் மீதான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ,தற்போது வசிஸ்டா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை ஓய்வு பெற்ற நீதிபதி ராமமோகன ராவ் கடந்த 2016-ம் ஆண்டு ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு பின்னர், 2017-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றவர் என்பதோடு, அவர் சிறிது காலம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பணியாற்யவர் என்பது குறிப்பிடத்தக்கது.